Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர் | மைத்திரி

February 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரதமரினால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது | மைத்திரி

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போதிலும், சிறையிலிருந்து விடுதலையானதன் பின்னர் ஜனாதிபதியானார்.

அதே போன்று எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், தேர்தலில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். பண்டாரநாயக்கவை கொலை செய்ததைப் போன்று இன்று என்னை கொல்லாமல் கொல்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கம்பஹாவில் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சு.க. தொகுதி அமைப்பாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்து விடுதலையாகி நாட்டின் ஜனாதிபதியானார். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவை கொலை செய்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை நீக்கினர்.

என்னை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றனர். என்னைப் பற்றி பேசுபவர்களின் பின்னணியில் வேறு குழுக்கள் உள்ளன.

அந்தக் குழுக்களாலேயே அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. இவை என்னுடனான தனிப்பட்ட முரண்பாடுகளால் இடம்பெறவில்லை.

மாறாக என்னுடையதும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் கொள்கை மற்றும் சர்வதேசத்துடனான தொடர்புகளாலேயே எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜே.வி.பி.யினர் தமது தேர்தல் பிரசார கூட்டங்களின் , தமது உறுப்பினர்கள் பதவியேற்றதன் பின்னர் சம்பளம் பெற மாட்டார்கள் எனக் கூறுகின்றனர்.

முன்னைய காலங்களில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என அனைவரது சம்பளத்தையும் கட்சிக்கு பெற்றுக் கொள்வார்கள். அதற்கமைய கட்சியால் தீர்மானிக்கப்படும் தொகை அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.

இவ்வாறான நிபந்தனைகள் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனினும் தற்போது போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அவற்றில் கையெழுத்திட மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளால் டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்தில் காணப்பட்ட ஐ.தே.க. தற்போது இரண்டாகப் பிளவடைந்துள்ளது.

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வீரர்களைப் போன்று கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை என்றார்.

Previous Post

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470 இற்கும் அதிகமானோர் பலி

Next Post

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

Next Post
ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures