Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படையினர் மூலம் போராட்டக்காரர்களை அடக்க அவரசகால வழிகாட்டல்கள் பயன்படுத்தப்படக்கூடாது | HRW

July 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறுபான்மையினரை ஒடுக்குவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது | மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி அவரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகப்புத்தரப்பினரும் அரசாங்கமும் போராட்டக்காரர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

நாட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை அடுத்து தோற்றம்பெற்ற மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களின் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியதுடன், அவரது பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார். 

அதனையடுத்து பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த புதன்கிழமை நாட்டில் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தினார்.

நாட்டின் இந்நிலைவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பதில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலையின் ஊடாகப் பாதுகாப்புத்தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் குறித்த விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. 

ஏனெனில் சர்வதேச சட்டமானது அவசரகாலநிலை அமுலில் உள்ளபோது சில உரிமைகளுக்கு விலக்களிப்பதால் சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறல், மிகையான அளவில் படையினரைப் பயன்படுத்தல் மற்றும் ஏனைய சில உரிமைகள் மீறப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

ஆகவே அவசரகால வழிகாட்டல்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப்போராட்டங்களை முடக்குவதற்கோ அல்லது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மிகையான பாதுகாப்புப்படையினரை பணியில் ஈடுபடுத்துவதற்கோ பயன்படுத்தப்படக்கூடாது. 

கடந்த காலங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால வழிகாட்டல்களின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை அடக்குவதற்கு மிகையான அளவில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது.

எனவே சிவில் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளுக்கு அமைவாகவே இராணுவத்தினர் செயற்படவேண்டும் என்பதுடன், ஒட்டுமொத்த பாதுகாப்புத்தரப்பினரும் அடிப்படை மனித உரிமைகளுக்கு அமைவாகச் செயற்படவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Previous Post

சிங்கப்பூரில் கோத்தபாயவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் | ஒருவர் மாத்திரம் கலந்துகொண்டார் 

Next Post

ஜனாதிபதி தெரிவில் ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை | அலிசப்ரி

Next Post
கோட்டாபயவுக்காக ரணில் போடும் டொனமூர் அரசியலமைப்பு முடிச்சு

ஜனாதிபதி தெரிவில் ரணிலை ஆதரிக்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை | அலிசப்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures