நெடுஞ்சாலை 401ல் பேரூந்து உருண்டதால் சாரதி காயம்!

நெடுஞ்சாலை 401ல் பேரூந்து உருண்டதால் சாரதி காயம்!

ரொறொன்ரோ-நெடுஞ்சாலை 401ல் பேரூந்து ஒன்று உருண்டு சரிந்ததால் ஒருவர் காயமடைந்துள்ளார். வியாழக்கிழமை காலை இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த சமயம் சாரதி மட்டும் பேரூந்தில் இருந்துள்ளார் என ஒன்ராறியோ மாகாண பொலிசாரின் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவை சேரந்த பேச்சாளர் சார்ஜன்ட் கெரி சிமித் தெரிவித்துள்ளார். சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சாரதியின் கால் உடைந்துள்ளதாக ரொறொன்ரோ அவசர மருத்துவ சேவைபிரிவினர் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை காலை 9.33மணியளவில் விபத்து நடந்துள்ளது.

busbus1bus2bus3bus4

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *