Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

October 7, 2017
in News, Politics
0
நுண் நிதிக் கடன்களை வடக்கில் நிறுத்தவேண்டும்

வடக்கு மாகா­ணத்­தில் நுண் கடன் வழங்­கல் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் நிதி நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­கள் நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சா­மி­யி­டம் யாழ்ப்­பாண மாவட்ட பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­ கள் நேற்று நேரில் வலி­யு­றுத்­தி­னர்.
இலங்கை மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சாமி, வடக்­குக்கு இரண்டு நாள்­கள் பய­ண­மாக நேற்று யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்­தார்.
திரு­நெல்­வே­லி­யில் உள்ள திண்ணை ஹோட்­ட­லில் அவர் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­னார். இதன்­போதே மேற்­படி கோரிக்கை முன்­வைக்­கப்பட்­டது.
யாழ்ப்­பா­ணம், மன்­னார் மாவட்­டச் செய­லா­ளர்­கள் மற்­றும் யாழ்ப்­பா­ணம் , கிளி­நொச்சி, மன்­னார் மாவட்ட அரச அதி­கா­ரி­கள் நேற்று காலை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.
பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் நேற்று மாலை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். மத்­திய வங்­கி­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள நிதி நிறு­வ­னங்­க­ளால் வடக்­கில் ஏற்­ப­டும் நெருக்­க­டி­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டது.
“வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் நிதி நிறு­வ­னங்­கள் நுண் கடன் என்ற பெய­ரில் மக்­க­ளுக்கு அதிக வட்­டிக்­குக் கடனை வழங்கி அதனை அற­வி­டு­வ­தற்­காக பெரும் நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர்.
சில நிறு­வ­னங்­கள் கடனை மீள அற­வீடு செய்­வ­தற்­காக வாடிக்­கை­யா­ள­ரின் வீட்­டுக்கு இர­வில் சென்று பெரும் தொல்லை கொடுக்­கின்­றன.
இத­னால் பல குடும்­பங்­கள் பிரி­வைச் சந்­தித்­துள்­ளன. சிலர் மன அழுத்­தத்­துக்கு உள்­ளாகி தவ­றான முடிவை எடுத்து உயி­ரைத் துறக்­க­வும் வழி வகுத்­துள்­ளது. இவ்­வா­றான நிதி நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­களை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும்.
மேலும் பிர­மிட் வணி­கத்தை ஒத்த வியா­பா­ர­மும் வடக்­கில் மிகப் பெரிய அள­வில் இடம்­பெ­று­கின்­றது. கேட்­டால் அனு­மதி உண்டு என்­கின்­ற­னர். அத­னால் குறித்த வியா­பா­ரத்தை பொலி­ஸா­ரும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில்லை” என்று பொது அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் மத்­திய வங்கி ஆளு­ந­ரி­டம் விளக்­க­மாக எடுத்­து­ரைத்­த­னர்.
“வடக்­கின் பொரு­ளா­தார மேம்­பாடு குறித்து அரசு கரி­ச­னை­யோடு உள்­ளது.போரின் பின்­பான அபி­வி­ருத்தி தொடர்­பில் அதிக கவ­னம் செலுத்­தி­யுள்­ளது.அந்­த­வ­கை­யிலே வடக்­கில் நிதி சார்ந்த செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்ற நிறு­வ­னங்­கள் தொடர்­பில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.நிதி நிறு­வ­னங்­கள் மீது உடன் நட­வ­டிக்கை எடுப்­பது இந்­தப் பய­ணத்­தின் நோக்­கம் அல்ல. ஆனால் வடக்கு மக்­கள் மீதான கடன் சுமை அதி­க­ரித்­துள்­ளது. குறிப்­பாக, நுண் நிதி நிறு­வ­னங்­கள் மற்­றும் மக்­க­ளி­டை­யே­யான நிதிக் கொடுக்­கல் வாங்­கல் தொடர்­பில் பல விட­யங்­களை திட்­ட­மி­ட­லோடு முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. அதற்கு அரச திணைக்­க­ளங்­க­ளின் அதி­க­பட்ச உதவி தேவை. மக்­க­ளுக்கு நிதி கையா­ளுகை தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் செயற்­பா­டு­க­ளின் தேவைப்­பாடு உண­ரப்­பட்­டுள்­ளது. அது குறித்து அனை­வ­ரும் சிந்­திக்க வேண்­டும். மிர­மிட் வணி­கத்தை ஒத்த வகை­யில் இடம்­பெ­றும் வியா­பா­ரம் தொடர்­பில் உட­ன­டி­யா­கவே பொலி­ஸார் மூலம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்று மத்­திய வங்கி ஆளு­நர் இந்­தி­ர­ஜித் குமா­ர­சாமி தெரி­வித்­தார்.

Previous Post

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

Next Post

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

Next Post
சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!

குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!

August 6, 2026
இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட விஜய் அண்டனியின் நூறு சாமி படத்தின் டீசர்

ஓகஸ்ட் 7ஆம் திகதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘நூறு சாமி’

August 6, 2026
ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

August 5, 2026
நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

August 5, 2026

Recent News

குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!

குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!

August 6, 2026
இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட விஜய் அண்டனியின் நூறு சாமி படத்தின் டீசர்

ஓகஸ்ட் 7ஆம் திகதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘நூறு சாமி’

August 6, 2026
ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்

August 5, 2026
நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

August 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures