‛சத்யா’ படத்தை தொடர்ந்து ‛‛ரங்கா, மாயோன், வால்டர்” படங்களில் நடிக்கிறார் சிபிராஜ். இதையடுத்து, புலிக் கதை ஒன்றில் நடிக்கிறார். அழிந்து வரும் புலி இனத்தைப் காப்பதற்காக, கதாநாயகன் எடுக்கும் நடவடிக்கைகள் தான் படத்தின் கதை.
சிபி ராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். தரணிதரன் இயக்கும் இந்தப் படத்தை, ஆரோ சினிமாஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனம், ஏற்கனவே அதர்வா நடித்த 100 உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ரேஞ்சர் என தலைப்பிட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
போஸ்டரில் சிபி ராஜும், புலியும் நேருக்கு நேர் சந்திப்பது போன்று உள்ளது. அதோடு சிபி ராஜ் அருகே உள்ள ஜீப்பில் தமிழ்நாடு அரசு வனத்துறை என அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் வனத்துறை அதிகாரியாக நடிக்கலாம் என தெரிகிறது.