நாட்டில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களை தொடர்ந்து இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அந்தவகையில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அடுத்த நாள் (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல், நேற்று அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து நேற்றும் இரவு 9.00 மணி முதல், இன்று அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

