Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம்

October 19, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எதிர்கால தலைமுறையை உருவாக்குபவர்கள் அதிபர்கள் | வடக்கு மாகாண ஆளுநர்

தமிழின அரசாட்சியின் சின்னமாக விளங்கும் யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கு திடமான நிலையை ஏற்படுத்தி தருமாறு வடக்கு ஆளுநரிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு சீ.வீ.கே சிவஞானம் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ”யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் கிழக்குப் புறமாக அமையப் பெற்றதே “நல்லூர் சங்கிலியன் பூங்கா” 1989 வரை செம்மணி வீதி என்பது அதற்கு வடக்காக அமைந்துள்ள தேவாலயத்துக்கு எதிராக பருத்தித்துறை வீதி வரையானதாக இருந்தது. இதற்கு தெற்காகவும், பருத்தித்துறை வீதிக்கு கிழக்காகவும் முத்திரை சந்தையும், மாநகர சபையால் வடகைக்கு கொடுக்கப்பட்ட கடைகளும் இருந்தன.

நல்லூர் சங்கிலியன் பூங்கா

1989 இல் பருத்தித்துறை வீதியில் இருந்து தேவாலயத்துக்கு நேராகச் சென்ற செம்மணி வீதியின் பகுதி தெற்குப் பக்கமாக இருந்த தனியார் காணிகளை தெற்கு எல்லையாகக் கொண்டு தற்போதுள்ளபடி செம்மணி வீதி மாற்றப்பட்டு, நேரான வீதியாக அமைக்கப்பட்டது.

இதனால் இந்த செம்மணி வீதியின் வடக்காக செட்டியார் தோட்டம் என்று அழைக்கப்படும் காணியை வடக்கு எல்லையாகக் கொண்ட காணியாக ஒன்றிணைக்கப்பட்டது. இந்த முழுக் காணியும் மாநகர சபையின் ஆட்சியின் கீழ் இருந்து வருவது வரலாறு.

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் | Nallur Sangiliyan Park Issue C V K Letter Governor

1966 ஆம் ஆண்டின் நில அளவை நாயகத்தின் வரைபடத்தின்படி அப்போதே இந்கு சந்தை இருந்தமை உறுதிப்படுத்தப்படுகிறது. சந்தைகளின் நிர்வாகம் நாடு பூராகவும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்திற்குட்பட்டது என்பது சட்டப்படி தெளிவானது.

இந்தப் பகுதி யாழ்ப்பாண மாநகர சபையின் “சங்கிலி தோப்பு” என்ற பெயரிலான 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் 1950 ஆம் ஆண்டு ஸ்ரான்லி கல்லூரி மாணவனாக முத்திரைச் சந்தையைக் கடந்து சென்ற அனுபவமும், 1960 இல் யாழ்ப்பாண மாநகர சபையின் ஒரு அலுவலராக சேர்ந்தபொழுது மேற்குறிப்பிட்ட சந்தையும், கடைகளும் மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் இருந்தமையும் 1978 இல் மாநகர சபையின் ஆணையாளராக இருந்த பொழுது சிறுவர் பூங்கா நிறுவிய அனுபவமும் உண்டு.

நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள்

ஈழத் தமிழர் வரலாற்றில் யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளங்களாக இந்தப் பகுதி விளங்குகிறது. இத்தனை பெருமைக்குரிய மண்ணில் உள்ள ஒரேயொரு வெளி நிலமான முத்திரைச் சந்தைப் பகுதியில் மன்னன் சங்கிலியனின் பெயர் நீண்டு நிற்க வேண்டும் என்ற எண்ணத்தின்படியே, செம்மணி வீதியை இடம்மாற்றி முழுப் பகுதியையும் ஒன்றிணைத்து “சங்கிலியன் பூங்கா” 1989 இல் அமைக்கப்பட்டது.

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் | Nallur Sangiliyan Park Issue C V K Letter Governor

அது மாநகர நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இந்த நிலையில் நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் இந்த நிலம் மாநகர சபைக்கு உரித்தானது அல்ல என்ற தோரணையிலும் அது அரச காணி (State Land) என்ற தோரணையிலும் இங்கு நல்லூர் பிரதேச செயலகம் அமைப்பதற்கு அனுமதி கோரி தங்களுக்கு சமர்ப்பித்த கோரிக்கையின் பேரில் தங்கள் தலைமையில் ஓர் அதிகாரிகள் கலந்துரையாடல் கடந்த வாரம் நடைபெற்றதாக ஊடகச் செய்தி மூலம் அறிய வந்தது.

இது மிகுந்த அதிர்ச்சியை தந்தது. இதற்கு மேலாக நல்லூர் பிரதேச செயலகத்திற்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினால் வழங்கப்பட்ட குத்தகை 25 அல்லது 30 வருடம் என்றும் ஏற்கனவே அதில் 15 அல்லது 20 வருடங்கள் சென்றுவிட்டதாகவும், நல்லூர் கோவில் நிர்வாகம் கால நீடிப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்தது. இவை முழுவதுமே உண்மைக்கு புறம்பானவை.

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு அதன் கட்டடம் அமைந்துள்ள 10 பரப்பு காணியை மாநகர சயைின் குத்தகையில் இருந்து நீக்கி 01.05.2005 ஆம் திகதியில் இருந்து 50 வருடக் குத்தகையை நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுத்ததே நான்தான். அதில் சாட்சியாக நானே ஒப்பமிட்டிருப்பதையும் காணலாம்.

யாழ். மாநகர சபையில் தீர்மானம்

குத்தகைக் காலம் இன்னும் 30 வருடங்கள் இருக்கையிலும், குத்தகை முடிவுக் காலத்தில் அதனை நீடிப்பதற்கான ஏற்பாடு உடன்படிக்கையிலேயே உள்ளடக்கப் பட்டு இருக்கையிலும், சங்கிலி மன்னனின் பெயரில் அமைந்த பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில் இந்தக் காணியை தமக்கு வழங்குமாறு கோரும் நோக்கம் புரிந்து கொள்ள முடியாதததும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் | Nallur Sangiliyan Park Issue C V K Letter Governor

இதன் பின்னணியில் ஏதாவது மறைகரங்கள் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதே. இதில் எனக்கிருந்த மிகப் பெரிய ஆச்சரியம் மாநகர சபை நிர்வாகமும் தெளிவற்று குழம்பியிருந்தமையாகும்.

கடந்த 13.10.2025 அவர்களுடன் கலந்துரையாடி முழு வரலாற்று விபரங்களையும் நான் தெளிவுபடுத்தியதன் அடிப்படையில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமது ஆட்சி உரித்தில் இருந்த இந்தக் காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைத்து பூங்காவை மேம்படுத்த யாழ். மாநகர சபை 14.10.2025 ஆம் திகதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை எனது 17.07.2025 ஆம் திகதி கடிதம் மூலம் நான் ஏற்கனவே கோரியிருந்தமையையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

எனவே, இந்த விடயம் தங்களது கவனத்திற்கு வந்துள்ள நிலையில், இவ்வாறான நிலை மேலும் தொங்கு நிலையில் தொடராமல் இருப்பதற்கான பொருத்தமான நடவடிக்கையை எடுத்து இந்த தமிழின அரசாட்சியின் சின்னமாக “ நல்லூர் சங்கிலியன் பூங்கா” எனும் பெயரில் எம்மின வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டு தொடர்வதற்கான திடமான நிலையை ஏற்படுத்தி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..!

Next Post

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

Next Post
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures