பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமான தமது கட்சியின் முடிவை இன்றிரவு அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மதியம் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் இவ்வாறு கூறியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்றைய தினம் கூடி இது சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.