Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நந்திக்கடல் பகுதியில் மர்மம்..! இராணுவம் மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன..?

January 19, 2017
in News
0

நந்திக்கடல் பகுதியில் மர்மம்..! இராணுவம் மறுப்பு தெரிவிக்க காரணம் என்ன..?

நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கேப்பாப்பிலவு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிக்கவுள்ளதாகவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், படை முகாம் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் அந்த காணிகள் மக்களிடம் கைளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் நந்திக்கடல் முக்கிய பங்கை வகித்துள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவரது உடல நந்திக்கடல் பகுதியில் இருந்தே உடல் கிடைக்கப்பெற்றதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த பகுதியினை இராணுவத்தினர் விடுவிக்காமல் தொடர்ந்தும் முற்றுகையிட்டிருப்பது பலருக்கும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் ஏதேனும் மர்மங்கள் இருக்க கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

அலங்கா’நல்லூர்’ ஆடும் வரை, ஈழ’நல்லூர்’ அடங்காது? யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்…!

Next Post

13 ஆம் திருத்த சட்டத்திற்கு விடுதலைப்புலிகள் உடன்பட்டனர்: புதிய உண்மையை வெளியிட்ட பொன்சேகா

Next Post
13 ஆம் திருத்த சட்டத்திற்கு விடுதலைப்புலிகள் உடன்பட்டனர்: புதிய உண்மையை வெளியிட்ட பொன்சேகா

13 ஆம் திருத்த சட்டத்திற்கு விடுதலைப்புலிகள் உடன்பட்டனர்: புதிய உண்மையை வெளியிட்ட பொன்சேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures