Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ் | கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு

December 4, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
தெலங்கானாவில் முந்தும் காங்கிரஸ் | கேசிஆரின் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு

தெலங்கானாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில், ஆளும் பிஆர்எஸ் கட்சி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. பிற கட்சிகள் 4 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

தெலங்கானா

இலக்கு 60

கட்சிகள் முன்னிலை

காங்கிரஸ் 68

பிஆர்எஸ் 40

மற்றவை 4

பாஜக 7

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு ஒரே கட்டமாக நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 2,290 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 221 பேர் பெண்கள், ஒருவர் 3-ம் பாலினத்தை சேர்ந்தவர். மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள். இதில், ஆண்கள் 1.62கோடி பேரும், பெண்கள் 1.63 கோடி பேரும், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 2,676 பேர். இம்முறை புதிதாக வாக்களிப்பவர்கள், அதாவது, 18-19 வயதினர் மட்டும் 9.99 லட்சம் பேர்.

வாக்குப்பதிவுக்காக மொத்தம் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 71.34% வாக்குகள் பதிவாகின.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அங்கு கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது. தெலங்கானாவில் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று கணித்துள்ளதால் அங்கே காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Previous Post

பிலிப்பைன்சில் கிறிஸ்தவ ஆராதனையின் போது குண்டு வெடிப்பு – பயங்கரவாத செயல் என குற்றச்சாட்டு

Next Post

யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

Next Post
20 மாதங்களில் 10 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்

யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures