துப்பாக்கி முனையில் வங்கிப் பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்

துப்பாக்கி முனையில் வங்கிப் பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்

கனடா நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் துப்பாக்கியை காட்டி மிரட்டி லட்சக்கணக்கான பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எட்மோண்டன் நகரில் உள்ள TD Bank என்ற வங்கியில் தான் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வங்கியில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றுள்ளனர்.

அப்போது, பின்னால் நின்றுருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து வங்கி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

‘வங்கியில் உள்ள பணத்தை உடனடியாக கொடுக்காவிட்டால் அனைவரையும் சுட்டு கொன்றுவிடுவதாக’ மிரட்டியதால் ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அப்போது, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு மற்றொரு நபரும் பணத்தை எடுக்க உதவியுள்ளார்.

உயிர் பயத்தில் இருந்த ஊழியர்கள் எவ்வித எதிர்ப்பையும் காட்டாததால் லட்சக்கணக்கான பணத்தை அள்ளிக்கொண்டு கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் அறிந்து வங்கிக்கு வந்த பொலிசார் கொள்ளை சம்பவத்தை பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

வங்கியில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள தகவல்களை சேகரித்தபோது ஒரு குறிப்பிட்ட வீட்டில் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், அதே நகரில் இருந்த வீட்டை சோதனை செய்தபோது கொள்ளையர்கள் அங்கு இல்லை என்பதால் பொலிசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எனினும், கொள்ளையர்களின் அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் தகவல் அறிந்த நபர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *