வென்னப்புவை பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வென்னப்புவை சிரிகம்பல பிரதேசத்தில் வைத்தே சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்திற்காக சந்தேக நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து பழைய மாதிரித்துப்பாக்கியொன்றும் அதற்கான ரவைகளும், கைத்துப்பாக்கி மற்றும் விளையாட்டுத் துப்பாக்கிகள் அவற்றுக்கான ரவைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. என்று தெரிவிக்கப்பட்டது.