Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழ் செயற்பாட்டாளரின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய தொல்பொருள் திணைக்களத்தினர்! வேலன் சுவாமிகள் ஆதங்கம்

July 17, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாட்டாளர்களே குருந்தூர் மலை பொங்கல் விழாவுக்கு இடையூறு விளைவித்தார்கள் என யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்தின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவனார் ஆலய பொங்கல் விழாவை நடத்த நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். குறித்த ஏற்பாடு நடவடிக்கைகளுக்கு முதலில் தொல்பொருள் திணைக்களத்தினர் வருகைதந்து இடையூறு விளைவித்தனர்.

மேலும் அவர்கள் இந்த இடத்தில நெருப்பு பற்றவைக்க முடியாது என தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக எமது அரசியல் செயற்பாட்டாளர்கள் “அதற்கான எழுத்துமூல ஆவணத்தை வைத்துள்ளீர்களா?” என தொல்பொருள் திணைக்களத்தினரிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு அவர்களால் எவ்வித பதிலும் வழங்க முடியவில்லை. இதன் பின்னரே பௌத்த தேரர்கள் தலைமையில் அங்கே வருகைதந்த, சில சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாட்டாளர்கள் பொங்கல் விழாவிற்கு தடையை ஏற்படுத்தினார்கள்.

தொல்பொருள் திணைக்கள அதிகாரி பொங்கல் விழாவிற்க்கான உத்தரவை வழங்கிய போதும், பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒரு குறித்த அதிகாரி திடீரென வருகைதந்து தீயை சப்பாத்து காலால் அணைத்துவிட்டார்.

இந்த செயல் இலங்கை பொலிஸாரின் ஒரு அராஜகமானச்செயல்.” என தெரிவித்தார். 

Previous Post

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ பட முன்னோட்டம்

Next Post

பிடிக்கவில்லை என்றால் பதவி விலகுங்கள் – ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Next Post
ரணிலால் இலங்கையில் சிவில் யுத்தம் ஏற்படும் ஆபத்து! பதுங்கு குழியில் மகிந்த | கடுமையான எச்சரிக்கை

பிடிக்கவில்லை என்றால் பதவி விலகுங்கள் - ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures