தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர்
தென்னிந்திய சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பது பல கலைஞர்களின் விருப்பம்.
அந்த வகையில் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கிய தா என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்ஸ்ரீவிஜய் ராகவன்.
இவர் இலங்கையில் ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்து இசையில் தன்னை இணைத்து இன்று தென்னிந்தியாவில் ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார்.
தற்போது இவர் இரண்டாவது படமாக ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கும்எங்க காட்டுல மழை என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி வெளியிட்டிற்கும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ராகவனின் பாட்டனார் இசைப்புலவர் ஷண்முகரட்ணம் மற்றும் தந்தையார் காலச்சூடாமணி ஷண்முகராகவன் ஆகியோர் இலங்கையின் புகழ் பூத்த கர்நாடக சங்கீத வித்வான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.