Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை! மௌனமான பாராளுமன்றம்

May 26, 2017
in News
0
தமிழர்கள் புலிக்கொடி ஏற்றுவதில் தவறில்லை! மௌனமான பாராளுமன்றம்

சிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் அகற்றப்பட்டதைப் போல, புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு புலிக்கொடியை பறக்க விடுவதில் என்ன தவறு? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வின்போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கிளிநொச்சியில் பிரதான வீதியில் உள்ள மின்கம்பங்களில் சிங்கக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

சிங்கக்கொடிகள் பறக்க விடுவதற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் பறக்கவிட்ட சிங்கக்கொடியில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் அடையாளங்கள் இருக்கவில்லை.

சிறுபான்மையினரை விலக்கிவிட்டு தனி பெரும்பான்மையை குறிக்கும் கொடியே பறக்கவிடப்பட்டது. இதை கிளிநொச்சி பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இவ்வாறு இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை புறக்கணித்து பிரிவினையை மையமாக வைத்த சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சிலர் செயற்படும் போது, தமிழர்களும் புலிக்கொடிகளில் விடுதலைப்புலிகள் என்ற வாசகத்தை நீக்கிவிட்டு ஏற்றுவதில் என்ன தவறு இருக்கின்றது என கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகளை தடுக்காமலும், தமிழ் மக்களுக்கான சமத்துவம் வழங்கப்படாத நிலையிலும் எவ்வாறு ஏனைய விடயங்களை நாம் எதிர்பார்க்க முடியும் எனவும் நாடாளுமன்றில் சி.சிறீதரன் தெரிவித்திருந்தார்.

வழமையாக இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போது பாராளுமன்றத்தில் கூச்சல்கள் மற்றும் குழப்பங்கள் எழுப்பப்படுகின்ற நிலையில், நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழுத்தமாக இந்த கருத்தை முன்வைத்த போது சபை அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களின் தகவல்கள் எங்களிடம் இல்லை: அரசாங்கம்

Next Post

அன்று பெண் புலி போராளி.. இன்றோ இராணுவ வீராங்கனை! போராளிகளின் சோகக்கதை

Next Post
அன்று பெண் புலி போராளி.. இன்றோ இராணுவ வீராங்கனை! போராளிகளின் சோகக்கதை

அன்று பெண் புலி போராளி.. இன்றோ இராணுவ வீராங்கனை! போராளிகளின் சோகக்கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures