Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர!

March 20, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்குவோம் என உறுதிபட கூறுவதற்கு அனுரவுக்கு துணிச்சல் இல்லை என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் ஆட்சிப் பீடத்திற்கு வரத் துடிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க தேசிய இனப்பிரச்சினைக்கு தங்கள் கட்சி சார்பில் எவ்வாறான தீர்வினை வழங்குவோம் என உறுதி பட கூறுவதற்கு துணிச்சல் அற்றவராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழர்கள் கோரும் சமஸ்டி தீர்வு 

பௌத்த சிங்கள மக்களை பகைத்துக் கொள்ளாமல் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க அனுர நினைக்கிறார்.

தமிழர்கள் கோரும் சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசக்கூடாது எனக் கூறும் அனுர, தான் வழங்க நினைக்கும் தீர்வை வெளிப்படையாக கூற முதுகெலும்பு அற்றவராக இருப்பதுடன் ஏனைய சிங்கள கட்சி தலைவர்களை விட தான் தந்திரமாக தமிழர்களை ஏமாற்றி விடுவேன் என மனப்பால் குடிக்கிறார்.

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர! | Anura Is The Solution To The Ethnic Problem

தமிழர்களின் விடுதலைப் போராட்ட தியாகம் அதன் அர்ப்பணிப்பு போன்றவற்றை கொச்சைப்படுத்தும் வகையில் அனுரகுமார தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளை உணவை பெற்றுத் தருவதாக கிளிநொச்சியில் கூறியுள்ளார்.

மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தமிழர்களின் 1952 ஆண்டு தேர்தல் வரலாற்றை அனுர படிக்கவில்லை. அன்றைய தேர்தல் கோசம் தமிழ் மக்களை நோக்கி சோறா? சுதந்திரமா? என்றவாறே இருந்தது மக்களின் முழுமையான ஆதரவு சுதந்திரம் என்பதாகவே இருந்தது.

ராஜபக்ச அரசாங்கம்

அன்றிலிருந்து இன்று வரை பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழர்களின் நிலைப்பாடு உரிமைக்கானதாகவே புள்ளடி மூலம் காட்டப்பட்டது. இதனை அனுரகுமார புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் அனுர! | Anura Is The Solution To The Ethnic Problem

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் உணவுப் பொருட்களை வன்னிக்கு செல்ல விடாது ராஜபக்ச அரசாங்கம் தடுத்த போது அவர்களுடன் இணைந்து துரோகம் இழைத்து விட்டு இன்று அதே மக்களைப் பார்த்து மூன்று வேளை உணவை தருவோம் என கூறுவதற்கு பதவி ஆசை தானே காரணம்.

ஆகவே சிங்கள கட்சிகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதற்கு ஐே.வி.பியும் விதிவிலக்கல்ல எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள் | முக்கிய அறிவிப்பு வெளியானது

Next Post

அனைவரும் பார்க்க வேண்டிய மதிமாறன்

Next Post
அனைவரும் பார்க்க வேண்டிய மதிமாறன்

அனைவரும் பார்க்க வேண்டிய மதிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures