தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் உரையாடினேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன் என்றும் கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவை நிச்சயம் எடுப்பேன் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.