இந்தச் சந்திப்பு நாடாளுமன்றத்திலுள்ள ஜனாதிபதியின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும், இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களோ தொடர்புபடுத்தப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மணித்தியால நேரம் நடைபெற்ற இந்த இரகசிய கலந்துரையாடலில், அடுத்த கட்ட அரசியல் நிலவரம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனித்தனியாக இரு கட்சிகளும் போட்டியிடுவது பற்றி கூடிய அவதானம் செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நேற்று முன்தினம் நாடாளுமன்றிற்கு வருகை தந்து, அவரது உரை முடிவடைந்த பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.