Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனவரி 2 முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் – கல்வி அமைச்சர்

December 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம் |கல்வி அமைச்சர் சுசில்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பொலிஸ், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினருடன் இணைந்து எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

178 நச்சுத் தன்மையுடைய போதைப்பொருட்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பான சட்டமூலம் கடந்த வாரம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் இவ்வாறான போதைப்பொருட்கள் 4 மாத்திரமே காணப்பட்டன. 

5 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை நீதிமன்றத்தினால் வழங்க முடியும்.

கொழும்பில் 144 பாடசாலைகளில் ஒரு இலட்சத்து 86,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 11,000 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 144 ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. போதைப்பொருட்களை எவ்வாறு இனங்காண்பது என்பது தொடர்பில் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுடன் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மிகவும் பாதுகாப்பாக செயற்பட வேண்டும். 

தெரியாத ஒரு விடயத்தை கற்பிக்க முயற்சிப்பது பொருத்தமற்றது. வைத்தியர்கள் நோயாளர்களை அணுகுவதைப் போன்றே அதிபர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குள் இவ்விடயம் தொடர்பில் மாணவர்களை அணுக வேண்டும்.

நாட்டிலுள்ள கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரிய பயிலுநர்களுக்கு மனநலம் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. 

எவ்வாறிருப்பினும், இந்த பயிற்சி சகலருக்கும் வழங்கப்படவில்லை. எனவே தான் தற்போது ஆசிரியர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டியுள்ளது. 

இவ்வாண்டில் 12,000 அனுபவம் மிக்க சிரேஷ்ட ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளனர். அவர்களின் இடத்துக்கு பொருத்தமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை 100 கல்வி வலயங்களிலும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் திங்கட்கிழமை (டிச. 19) இடம்பெறவுள்ளது. 

குறித்த ஒரு சர்வதேச அமைப்பு, பொலிஸார், சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், சிவில் பொலிஸார், போதைப்பொருள் விழிப்புணர்வு சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்து எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

Previous Post

நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை – வசந்ததீபன்

Next Post

முப்படைகளில் செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை ஆரம்பம்

Next Post
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

முப்படைகளில் செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures