Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்

December 25, 2016
in News
0
சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்

சோதனையில் ஈடுபட்ட பொலிசார்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய பெண்: அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்

வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பொலிசார் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு பெண் மற்றும் சிறுவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் அஷ்கோனா பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது

இதையடுத்து பொலிசார் ஆயுதங்களுடன் இன்று அதிகாலையில் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.

அங்கு இருந்து பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றிய பொலிசார் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சரண் அடையும் படி எச்சரித்தனர்.

இந்நிலையில் ஒரு பெண், குழந்தையுடன் வெளியே வந்தார். ஆனால் பொலிசாரை பார்த்ததும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உடல் சிதறி இறந்துபோனார்.

பொலிசாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகளுடன் சரண் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை கட்டிடத்தை நோக்கி வீசி தாக்குதலை தொடர்ந்தனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, ஒரு சிறுவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட சிறுவன் தப்பி ஓடிய தீவிரவாத அமைப்பின் தலைவரின் மகன் என்றும், இறந்துபோன பெண் மற்றொரு தலைவரின் மனைவி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

சசிகலாவிடம் அதிரடி சோதனை? வெளியான பரபரப்பு தகவல்

Next Post

போதை மயக்கத்தில் தாய்- தந்தை! குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்

Next Post
போதை மயக்கத்தில் தாய்- தந்தை! குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்

போதை மயக்கத்தில் தாய்- தந்தை! குழந்தைக்கும் நடந்த கொடூர சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures