Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சேகர் ரெட்டியிடம் 300 கோடி லஞ்சம் பெற்ற அந்த 4 அமைச்சர்கள்: யூலையில் ஆட்டம் ஆரம்பம்

May 11, 2017
in News
0
சேகர் ரெட்டியிடம் 300 கோடி லஞ்சம் பெற்ற அந்த 4 அமைச்சர்கள்: யூலையில் ஆட்டம் ஆரம்பம்

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்களில் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் இருவர் பெயரும் இடம் பெற்றிருப்பதால் யூலை மாதத்திற்கு பின்னர் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணமும் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

ஆனால், சேகர் ரெட்டியிடம் விசாரித்த போது தாம் டைரி எதுவும் எழுதவில்லை என்று கூறியதாக அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி தைரியம் கூறியுள்ளார்.

அதே நேரம், வருமான வரித்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நடவடிக்கை எடுத்து விடுவார் என்ற அச்சமும் நிலவியது.

அதனால், அவரிடம் இருந்த லஞ்ச ஒழிப்பு துறை பறிக்கப்பட்டு நிரஞ்சன் மார்டியிடம் அந்த பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சேகர் ரெட்டி டைரி எதுவும் எழுதவில்லை என்பது உண்மைதான் ஆனால், எந்தெந்த அமைச்சர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதித்துறை ஆகிய நான்கு துறைகளின் முக்கிய ஒப்பந்ததாரராக இருந்த சேகர் ரெட்டி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி, மின்துறை அமைச்சர் தங்கமணி, வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி, பன்னீர் உள்ளிட்ட இருவர் பெயரும் சேகர் ரெட்டியின் நோட்டு புத்தக குறிப்பில் இடம் பெற்றுள்ளதால் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று டெல்லி நினைப்பதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி வரும் யூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ க்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தமக்கு வேண்டும் எனவும் பாஜக விரும்புகிறது.

ஆகவே, ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் சேகர் ரெட்டி குறிப்பின் அடிப்படையில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான நடவடிக்கை உறுதி என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Featured
Previous Post

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பன்னீர் செல்வம்

Next Post

பிரான்ஸ் அகதிகள் முகாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Next Post
பிரான்ஸ் அகதிகள் முகாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

பிரான்ஸ் அகதிகள் முகாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures