Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு அமெரிக்க ஆய்வுக் கலம் சாதனை

April 14, 2019
in News, Politics, World
0

செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு அமெரிக்க ஆய்வுக் கலம் சாதனை…”,

:”செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதல் முறையாக சேகரித்து அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சாதனை படைத்துள்ளது.”,

” “செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதல் முறையாக சேகரித்து அமெரிக்காவின் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கியூரியாசிட்டி ஆய்வுக் கலம், அண்மையில் நிலத்தடிப் பாறையொன்றில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்துள்ளது. அந்த கிரகத்தில் தரையிறங்கிய 2,370-ஆவது செவ்வாய் கிரக நாளில் (2,244 பூமி நாள்), அதாவது கடந்த 6-ஆம் தேதி இந்த சாதனையை கியூரியாசிட்டி செய்துள்ளது.

ஷார்ப் மலைப் பகுதியில், களிமண் பிரிவு என்றழைக்கப்படும் இடத்தில், அபெர்லேடி என்று பெயரிடப்பட்ட நிலத்தடிப் பாறையில் துளையிடப்பட்டுள்ளது.

அருகிலுள்ள வேரா ரூபின் ரிட்ஜ் என்ற பகுதியில் பாறையில் துளையிடுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், இந்தப் பாறையில் வெற்றிகரமாகத் துளையிட்டு, உள்பொருள்களை கியூரியாசிட்டியிலுள்ள கருவி மிக எளிதில் உறிஞ்சி எடுத்துள்ளது.

சேகரிப்பட்ட மாதிரிகள், கியூரியாசிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மாதிரிகளின் தன்மைகள் குறித்து அந்த ஆய்வகம் சோதனைகளை மேற்கொள்ளும்.

துளையிடும் கருவியை மட்டும் பயன்படுத்தி, செவ்வாய் கிரக மாதிரிகளை கியூரியாசிட்டி ஆய்வுக் கலம் சேகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் தன்மையை அறிந்து கொண்டால், செவ்வாய்கிரகத்தில் நிலத்தடி நீர் இருக்குமா? என்பதைத் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளதால், அவை குறித்த ஆய்வில் விஞ்ஞானிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Next Post

பாகிஸ்தான்: வெள்ளத்தில் 8 பேர் பலி 

Next Post

பாகிஸ்தான்: வெள்ளத்தில் 8 பேர் பலி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures