ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பு குறித்து, ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி கருத்து தெரிவித்துள்ளார்.
ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முதற்படியில், ஒன்ராறியோ அரசாங்கம் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி, “ரொறொன்ரோ போக்குவரத்து ஆணையத்தை கட்டுப்படுத்தும் எந்த உத்தேசமும் வலுவான ஆலோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மாகாணம் இத்தகைய ஒரு திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக உருவாக்க முடியாது” என கூறியுள்ளார்.
ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பின், சிறந்த அணுகு முறையை நாடுவதற்கு ஆலோசனை குழுவொன்றை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.