சஸ்கற்சுவானில் அதிகரிக்கும் தற்கொலைகள்

சஸ்கற்சுவானில் அதிகரிக்கும் தற்கொலைகள்

வடக்கு சஸ்கற்சுவானுக்கு வாரம் ஒருமுறை மூன்று மன ஆரோக்கிய சிகிச்சையாளர்கள் பயணம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வடக்கு சஸ்கற்சுவானில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று பெண்கள் தற்கொலை செய்து இறந்த நிலையில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஸ்ரான்லி மிஷனைச் சேர்ந்த 12 முதல் 14 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டனர். லா லோஞ்ச் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பெண் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார்.

குறித்த பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பிரதேச மக்களின் மன அழுத்தங்கள் மற்றும் மனக் கவலைகளை குறைக்கும் வகையில் மன ஆரோக்கிய சிகிச்சையாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *