தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்க வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை விழா ஒன்றில், கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன் அங்கு தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளியாக செய்திக்கு விளக்கமளிக்கவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க,
“வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஸ்வரன், உண்மையாக கல்வித் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுக்கொண்டவரானால் அவரது நிலைப்பாடு தொடர்பில் நாட்டுக்கு விளக்கமளிக்க அவருக்கு தாம் அழைப்பு விடுக்கிறோம்” என கூறினார்.