Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோருவதற்கு இதுவே காரணம்! பாக்கியசோதி சரவணமுத்து

December 23, 2021
in News, Sri Lanka News
0
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோருவதற்கு இதுவே காரணம்! பாக்கியசோதி சரவணமுத்து

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மனித உரிமை மீறல் நிலைமைகளை சவாலுக்கு உட்படுத்த புதிய மனித உரிமைகள் நிகழ்ச்சி திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். மாற்றுக் கொள்ளைகளுக்கான நிறுவன பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சவால்களை வெற்றிக்கொள்ள குடியியல் சமூகம் தனித்து செயற்பட முடியாது எனவே அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும்.

இதன்மூலமே சில வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையை பொறுத்தவரையில் பெரும்பாலும் மாற்றங்கள் அரசியல் கட்சிகளின் ஊடாகவே வருவதால் அவற்றுடன் இணைந்து செயற்படுவது பயனை தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தயாரிக்கப்படும் மனித உரிமைகள் மீறல் நிகழ்ச்சி திட்டத்தில் அரசியல், பொருளாதார, ஒருங்கிணைப்பு உள்ளிட்ட உரிமைகள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற வேண்டும்.

அத்துடன், சுற்றாடல் பாதுகாப்பு உரிமைகளும் அதில் சேர்க்கப்பட வேண்டும் என பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமாகும். மக்களின் வாக்குகளினாலே அது பதவிக்கு வந்தது. அரசை பொறுத்தவரை அது ஒரு நிறுவனமல்ல, ஆனால் சுதந்திரமுடையது.

ராஜபக்சர்களை பற்றி தனிப்பட்ட ரீதியில், குழு ரீதியில் சில விடயங்களை கூறமுடியும். அண்மைக்கால வரலாற்றை எடுத்துக்கொண்டால் அரசாங்கத்தில் குடும்ப அரசியல் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

அடுத்ததாக தனிப்பட்ட ரீதியில் தம்மைப்பொறுத்தவரை இதுவரை காலம் இல்லாத நிலையில் தற்போதைய அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய அரசாங்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமது குடும்பத்துக்கு முதன்மையான பதவிகளை வழங்கி அவர்களுக்கு அதிக அதிகாரங்களையும் தற்போதைய அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

இது 20வது திருத்தச் சட்டம் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அடுத்ததாக சிங்கள பௌத்தர்களை கொண்ட பெரும்பான்மையை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி சர்வதேச ரீதியாக சென்று குடியியல் சமூகத்துடனும், புலம்பெயர்தோரிடம் பேச வேண்டும் என கூறிவருக்கின்றார். எனினும் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இதுவரை கலந்துரையாடலிலும் ஈடுபட வில்லை.

அத்துடன், புலம்பெயர்ந்த அமைப்புகளை அவர் தடை செய்திருக்கின்றார். எனவே இது மக்களை ஏமாற்றும் அல்லது முட்டாள்களாக கருதும் கருத்தாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை இரட்டை கொள்கைகளை அது கடைப்பிடித்து வருகின்றது. ஒரு பக்கத்தில் நல்லிணக்கம் தொடர்பாக குடியியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளை சிறையில் அடைக்கப்பட வேண்டிய ஞானசார தேரரை ஓரே நாடு ஓரே சட்டம் செயலணிக்கு தலைவர் ஆக்கியிருக்கின்றது.

அதேபோன்று இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் சிறுவர்களை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன் ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படடது.

இந்த நிலையில், இலங்கையின் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை கருத்தில் கொள்ளாது ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதை எந்த நீதிக்குள் அடக்க முடியும் என பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பினார்.

இதன் காரணமாகவே இலங்கை மக்களின் ஒரு பகுதியினர் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என கூறுவதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை கோவிட்டினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய இந்த அரசாங்கம் மறுத்தது.

எனவே இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இனவாதமாகவே பார்க்க முடியும். வடக்கு கிழக்கு மக்கள் தொந்தரவு மற்றும் அச்சத்திற்க்கு மத்தியிலே வாழ்ந்து வருகின்றனர்.

நாடு இன்று பொருளாதாரத்தில் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 69 லட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர்.

இந்த நிலையில் மக்கள் பொருளாதார நிலைமை காரணமாக வீதிகளில் இறங்கலாம் அவ்வாறு வீதிக்கு வரும் போது அரசாங்கம் இராணுவ படையை அனுப்பும். இதன்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் ராஜபக்சர்களால் கடந்த காலத்தில் கருவியாக பயன்படுத்தப்பட்டார். அதே போன்றே தற்போதும் எதிர்காலத்திலும் பயன்படுத்தப்படுவார்.

எனவே தற்போதைய சூழ்நிலையில், குடியியல் குழுக்கள் இதனை எவ்வாறு சமாளிப்பது என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் மாற்றுக் கொள்ளைகளுக்கான நிறுவன பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இதனை தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ராஜபக்சக்கள் ஒருபோதும் நாட்டைவிட்டுத் தப்பியோடவே மாட்டார்கள் | சசீந்திர

Next Post

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

Next Post
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures