‛பூமராங்’ படத்தை தொடர்ந்து மீண்டும் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் கண்ணன். இதையடுத்து, சந்தானத்தை கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ம் தேதி முதல் பூஜையுடன் துவங்கியது. வரும் 2020 பிப்ரவரியில், இந்த படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‛ஜெயம் கொண்டான்’ தொடங்கி ‛சேட்டை’ வரை கண்ணன் இயக்கிய எல்லா படங்களிலும் சந்தானம், காமெடியனாக நடித்திருந்தார். இப்போது அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.