ஹம்பாந்தோட்டை மாவட்டம், அங்குணகொலபெலெஸ்ஸ, சூரியபொக்குனவிலவில் நிர்மாணிக்கப்பட்ட ‘சதாசெத்கம’ வீட்டுத் திட்டம் நாளை மு.ப.11.00 மணியளவில் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
கம்உதாவ திட்டத்தன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் திட்டத்தில் 51 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.