ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியற் தரப்புக்கள் பலவும் தங்களுடைய நிலைப்பாட்டினை தெரிவித்துவருகின்றனர் அந்தவகையில் கோட்டபாய தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமித்தமை மிகவும் ஆபத்தான விடயம் எனவும் கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவராகும்.
கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது எனவும்கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.
ஊடகவியலாளர்கள் வீதி முழுவதும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.நான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்தார்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எனது பாதுகாப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.