நாட்டை டேர்மினேட்டர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நாடு முடிந்தது மாதிரிதான் இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இந்த நாட்டை கோட்டாபய போன்ற டேர்மினேட்டர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பதிலளித்திருந்தார்.
பசில் ராஜபக்ஸ சொன்னது சரியாகத்தான் உள்ளது. கோட்டாபயவுக்கு நாட்டைக் கொடுத்தால் நாடு முடிந்துவிடும். நாட்டின் பொருளாதாரம் முடித்துவிடுவார், நாட்டின் அபிவிருத்தியை முடித்துவிடுவார். ஜனநாயகம் முடிந்துவிடும். ஊடக சுதந்திரம் முடிந்துவிடும். சுயாதீன நீதிமன்றம் முடிந்துவிடும். இலவச கல்வி முடிந்துவிடும். நகர அபிவிருத்தி முடிந்துவிடும். சுகாதாரம் முடிந்துவிடும்.
இப்படியான ஒருவருக்கா நாட்டை ஒப்படைக்க வேண்டும் என நான் கேட்கின்றேன். நாட்டுக்கு முடிவுகட்டவா ? அல்லது நாட்டை பாதுகாக்கின்றவருக்கா? மக்கள் தீர்மானம் அமைய வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்