Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொழும்பு அரசியலில் திடீர் மாற்றம்! மைத்திரியுடன் இணையும் விமல், கம்மன்பில! நல்லாட்சியில் பிளவா?

January 9, 2017
in News
0

கொழும்பு அரசியலில் திடீர் மாற்றம்! மைத்திரியுடன் இணையும் விமல், கம்மன்பில! நல்லாட்சியில் பிளவா?

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த தயாராக இருப்பதாக சிறுகட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் உள்ள அரசியல் தொடர்பை கைவிட்டு ஜனாதிபதி வெளியேறியேறினால், ஜனாதிபதியின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசப்பற்றுள்ள சக்திகள் கொண்ட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெலஉறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட இடங்களை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு வழங்குவதனை தடுப்பதற்கும், எதிர்வரும் காலங்களில் நாடு துண்டு துண்டுகளாக பிளவடையும் ஆபத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவும் குறித்த உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர், ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பு இல்லை என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார் என இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர். அதற்கமைய தற்போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரும்பான்மை தலைவர்கள் ஒரே கருத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டை காப்பாற்றுவதற்காக தங்கள் தரப்பு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்துள்ளதனால், இது தொடர்பில் ஆராய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர கட்சி தரப்பினருக்கு சந்தர்ப்பம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விமல் மற்றும் கம்மன்பில் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரிடம் வினவிய போது, கடந்த 6ஆம் திகதி நிதி மோசடி தொடர்பில் விமல் வீரவன்ச கைது செய்யப்படவிருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காகவே, திடீரென தீர்மானங்களை மாற்றிக் கொள்வதற்கு இவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தற்போதைய நல்லாட்சி ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் மேலும் காலம் தாமதிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது கூட்டு எதிர்கட்சி உறுப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு தேசபற்று தேசிய இயக்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: Featured
Previous Post

நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய பொலிஸ்மா திணைக்களம் நடவடிக்கை!

Next Post

வாரக்கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்: மர்ம நோயின் காரணம் என்ன?

Next Post
வாரக்கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்: மர்ம நோயின் காரணம் என்ன?

வாரக்கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்: மர்ம நோயின் காரணம் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures