Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்: களத்தில் இறங்கியது ஜப்பான்

May 2, 2017
in News
0
கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்: களத்தில் இறங்கியது ஜப்பான்

வட கொரியா கடற்பகுதிக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க போர்க் கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ஜப்பான் தனது ராணுவத்தின் மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பியுள்ளது.

இதற்கான உத்தரவினை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தோமிமி இனாடா பிறப்பித்துள்ளார். 249 மீற்றர் நீளம் கொண்ட இஜூமா எனும் இந்த போர்க் கப்பலில் இருந்து 9 ஹெலிகாப்டர்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் கடற்பகுதிக்குள் தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் கார்ல் வின்சன் போர்க்கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கவும், எரிபொருள்களை வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்யவும் இந்த கப்பலை ஜப்பான் அனுப்பியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் மேற்கொண்டிருக்கும் மிக முக்கிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது தான் பயன்படுத்திய போர்க் கப்பலைப் போன்றது இது என ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராகவும், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது.

வட கொரியாவின் ராணுவ நடவடிக்கை, தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என தென் கொரியாவும், ஜப்பானும் தொடர்ந்து அச்சம் வெளியிட்டு வருகின்றன.

தொலைவில் உள்ள அமெரிக்காவைத் தாக்கும் வகையிலும், நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிக்கும் முனைப்பில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவும் கவலை அடைந்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்கவும், நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளை முறியடிக்கவும் திட்டமிட்டுள்ள அமெரிக்கா, வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதனால், கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags: Featured
Previous Post

எடப்பாடி ஆட்சிக்கு யூலை மாதம் வேட்டு: டெல்லியில் கசிந்த தகவலால் அதிர்ச்சி

Next Post

நடுவானில் மேலும் கீழும் குலுங்கிய விமானம்: கீழே விழுந்த பயணிகள்

Next Post
நடுவானில் மேலும் கீழும் குலுங்கிய விமானம்: கீழே விழுந்த பயணிகள்

நடுவானில் மேலும் கீழும் குலுங்கிய விமானம்: கீழே விழுந்த பயணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures