Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குற்றங்களில் இருந்து விடுபட பெருந்தொகை பணத்தை செலவிடும் ராஜபக்சவினர்!

July 25, 2016
in News, Politics
0

குற்றங்களில் இருந்து விடுபட பெருந்தொகை பணத்தை செலவிடும் ராஜபக்சவினர்!

ராஜபக்சவினர் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாக அவர்களிடம் இருக்கும் பணத்தில் மில்லியன் கணக்காண ரூபாவை செலவிட்டு வருவதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் அவர் இதனை கூறியுள்ளார்.

கிடைத்துள்ள தகவல்களின் படி பசில் ராஜபக்ச தான் கைது செய்வதை தவிர்ப்பதற்காகவும் நீதிமன்றத்தில் பிணை பெறவும் 60 லட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்.மருத்துவ அறி்க்கைகளை பெற்றுவதற்காக மாத்திரம் 50 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தளவு பணம் செலவிடப்படுவது குறித்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ராஜபக்சவினர் பீதிக்கு உள்ளாகி இருப்பதன் காரணமாக இப்படி பெருந்தொகை பணத்தை செலவிட்டு வருகின்றனர்.இவ்வாறான சூழலில் ஒழுக்கம் கெட்ட அதிகார போராட்டமும் இருக்கின்றது. இதனால், அரசாங்கத்தின் இருப்பு தொடர்பில் எமக்கும் ஒரு விதமான பொறுப்புள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை 100க்கு 100 வீதம் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இவர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி பெரும் மக்கள் சக்தியுடன் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டு ராஜபக்சவினருக்கும் மீண்டும் கதவை திறந்து விட எம்மால் முடியாது.

நடு நிலையாக இவை அனைத்து குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். நாட்டில் வாழும் சகல பிரஜைகளும் ஓரளவு விழிப்புணர்வை கொண்ட மனிதர்கள் என்ற வகையில் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

நாட்டில் ஒழுக்கமான ஆட்சி குறித்து நாம் சிந்திக்க வேண்டும் எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

கோத்தபாய விரைவில் கைதாவார்?

Next Post

பிரபாகரனின் புகைப்படத்தைக் காண்பித்து அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டல்!

Next Post

பிரபாகரனின் புகைப்படத்தைக் காண்பித்து அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures