நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை ஒட்டுமொத்த இனத்தின் தாக்குதலாக அடையாளப்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே காதர் மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
“முஸ்லிம் சமூகத்தின் பெயர்களை அடையாளப்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெறுகின்றமையினால் முழு சமூகத்தைமே குற்றவாளிகளாக அனைவரும் பார்க்கின்றனர்.
குறித்த செயற்பாடு, அனைத்து முஸ்லிம் மக்களிடத்திலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் முஸ்லிம் சமூகத்தின் பெயர்களை அடையாளப்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை உடனடியாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என காதர் மஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.