Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியில் 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள், 42 மோட்டார் பியுஸ் மீட்பு!

May 29, 2016
in News
0

கிளிநொச்சியில் 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள், 42 மோட்டார் பியுஸ் மீட்பு!

k1 k2 k3 k5 k6kகிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 9 கிளைமோர் குண்டுகளை 57ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் எடுத்துள்ளனர்.

இன்று (29) பிற்பகல் சுமார் 12 மணியளவில் 57ஆம் படைப்பிரிவினர் குறித்த தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஒரு கிளைமோர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டு 57ஆம் படைப் பிரிவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள நேரத்திலேயே இராணுவத்தினர் தமது தேடுதலை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்படி இன்று 12 மணியளவில் ஆரம்பித்து இதுவரை 9 கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இன்னும் தேடுதல் நடவடிக்கை முடிவடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் செல்லும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள், 42 மோட்டார் பியுஸ் மீட்பு

இன்று காலை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, 10 கிளைமோர் குண்டுகள் மற்றும் 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை 57ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் எடுத்துள்ளனர்.

குறித்த தேடுதல் 5.30 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று 12 மணியளவில் ஆரம்பித்த தேடுதல் நடவடிக்கையின் போது, 12.5 கிலோ கிராம் கிளைமோர் குண்டு ஒன்றும், 7.5 கிலோ கிராம் கிளைமோர் குண்டுகள் மூன்றும், 2.5 கிலோ கிராம் கிளைமோர் குண்டுகள் ஆறும், உள்ளடங்கலாக 10 கிளைமோர் குண்டுகளும்,

66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் களும் மாலை 5.30 மணிவரைக்கும் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதி மறுக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் முடிவுற்ற பின்பு மீட்கப்பட்ட வெடிபொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இதன்போது மீட்கப்பட்ட வெடி பொருட்களின் விபரங்கள் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

பிரபாகரன் உயிரிழப்பு! பதில் கூறுவதில் கருணா தயக்கம்??

Next Post

பரீட்சையில் சாதனை! மூவரின் உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த மாணவியின் நெகிழ்ச்சிப் பதிவுகள்

Next Post

பரீட்சையில் சாதனை! மூவரின் உயிரை காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த மாணவியின் நெகிழ்ச்சிப் பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures