வீதியில் படுத்துக்கிடந்தவரின் காலின் மேலால் ஏறிச்சென்றது ரிப்பர் வாகனம்
மாங்குளம் பனிக்கன் குளத்தில் சம்பவம்.
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம் ஏ ஒன்பது சாலையில் பனிக்கன்குளம் எனும் பகுதியில் படுத்திருந்தவரின் காலின் மேலால் ஏறியதில் இரண்டுகால்களும் சிதைவடைந்த நிலையில குறித்தநபர் முதலுதவியின் பின்னர் அவசரப்பிரிவு அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி கொண்டுசெல்லப்படுகின்றார்.
35-40 வயது மதிக்கத்தக்க நபராகவிருந்தபோதிலும் யார் என்று அடையளம் காணப்படவில்லை மதுபோதையில் வீதியினருகே படுத்திருந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

