Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரேசில் கிரேக்க தூதரை கொலை செய்த மனைவி: வெளியான பரபரப்பு தகவல்!

January 1, 2017
in News
0
கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரேசில் கிரேக்க தூதரை கொலை செய்த மனைவி: வெளியான பரபரப்பு தகவல்!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரேசில் கிரேக்க தூதரை கொலை செய்த மனைவி: வெளியான பரபரப்பு தகவல்!

பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் கொலையில் அவரது மனைவி சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டு கிரேக்க தூதராக பதவி வகித்து வந்தவர் Kyriakos Amiridis (59). இவர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிரேக்க தூதரகத்தில் பணிபுரிந்தார்.

இவரது வீடு நோவா பகுதியின் இகுயாசூ நகரில் உள்ளது. இவர் எதிர்வரும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக ரியோ டி ஜெனிரோவில் இருந்து பிராசிலியாவின் Copacabana கடற்கரைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென்று மாயமாகியுள்ளார்.

இதனால் பொலிசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் Kyriakos Amiridis ரியோ டி ஜெனிரோ நகரில் தனது காருக்குள் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரது உடலை உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி குடும்பத்தார்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பாக பொலிசார் Kyriakos Amiridis வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் இரத்தக்கரை இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவரது மனைவி பிரான்கோயிஸுக்கும், பிரேசில் காவல் அதிகாரியான செர்ஜியோ மொரைரா (29) என்ற நபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.

இதற்கு Kyriakos Amiridis தடையாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசிலியாவில் உள்ள அவரது வீட்டில் தூதரை இருவரும் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பிறகு காரில் எடுத்து சென்று உடலை எரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்த தொண்டர்: அதிரவைக்கும் காரணம்

Next Post

2017 ஆம் ஆண்டை முதலாவதாக கொண்டாடிய நியூசிலாந்து

Next Post
2017 ஆம் ஆண்டை முதலாவதாக கொண்டாடிய நியூசிலாந்து

2017 ஆம் ஆண்டை முதலாவதாக கொண்டாடிய நியூசிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures