கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் அநாகரீகமாக பேசிய கனடா நீதிபதி: பதவியை விட்டு நீக்க முடிவு

கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் அநாகரீகமாக பேசிய கனடா நீதிபதி: பதவியை விட்டு நீக்க முடிவு

கனடா நாட்டில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் அநாகரீகமாக கேள்விகளை எழுப்பிய நீதிபதியின் பதவியை பறிக்க நீதிபதிகள் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்பேர்ட்டா மாகாணத்தை Robin Camp என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, 19 வயதான இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாக வழக்கு ஒன்று அவரிடம் வந்துள்ளது.

நீதிமன்றத்தில் கற்பழித்தவர் மற்றும் கற்பழிக்கப்பட்ட பெண் விசாரணையில் நிறுத்தப்பட்டபோது பெண்ணை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

‘உங்களை நபர் கற்பழிக்க முயலும்போது ஏன் அதை நீங்கள் தடுக்கவில்லை. உங்களுடைய இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்திருந்தால் அவர் உங்களை கற்பழித்திருக்க முடியாது.

உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் கற்பழிப்பு என்பது நிகழ்ந்திருக்காது. எனவே, கற்பழிப்பை நீங்கள் தான் அனுமதித்துள்ளீர்கள். இவ்வழக்கில் நீங்கள் தான் குற்றவாளி’ எனக் கூறி கற்பழித்த நபரை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

நீதிபதியின் இந்த தீர்ப்பும், கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் அவர் எழுப்பிய கேள்விகளும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு இளம்பெண்ணை கற்பழித்த நபரை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது.

எனினும், நீதிபதியின் அனுகுமுறையான பெண்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என போராட்டங்கள் எழுந்த நிலையில் சர்ச்சைக்குரிய நீதிபதி தற்காலிகமாக தனது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய கமிட்டி நேற்று நடத்தியுள்ளது.

இதன் முடிவில், ‘பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க வைக்கும் இதுபோன்ற நீதிபதியை பணியில் தொடர அனுமதிக்க கூடாது எனவும் அவரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க இந்த கமிட்டி சிபாரிசு செய்வதாக’ அறிவித்துள்ளது.

– See more at: http://www.canadamirror.com/canada/75409.html#sthash.oohhkZNe.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *