Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடாவை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அரசு முடிவு

July 5, 2016
in News
0

கனடாவை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அரசு முடிவு

கனடா நாட்டை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பு தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சரான Ralph Goodale நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘கனடா நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டின் இரண்டாவது பக்கத்தில் உள்ள நபரின் முழு பெயர், குடியுரிமை, கடவுச்சீட்டை வழங்கியவர் மற்றும் நபரின் பாலினம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்.

இதுபோன்ற தகவல்களை சேகரிப்பதன் மூலம் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பது, நபர்களை சட்டவிரோதமாக கடத்துவது, சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்ளும் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது, புகலிடம் கோரி வருபவர்களை குடியமர்த்துவது மற்றும் விசா வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.

கனடாவை விட்டு தரை வழியாக வெளியேறினால், அமெரிக்க எல்லையில் உள்ள பொலிசார் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரித்து கனேடிய அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்புவார்கள்.

வான்வழியாக கனடாவை விட்டு வெளியேறினால், விமான நிறுவன அதிகாரிகள் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரித்து கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்குவார்கள்.

இதுமட்டுமில்லாமல், கடவுச்சீட்டு தகவல்களை சேகரிப்பதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும்.

மேலும், கனடா நாட்டிற்கு வெளியே சென்ற பிறகும் சிலர் கனேடிய வரிகளை செலுத்தாமல் இருப்பது, நாட்டிற்கு வெளியே இருந்துக்கொண்டு அரசாங்கம் அளிக்கும் வேலைவாய்ப்பு தொடர்பான மில்லியன் அளவிலான பணத்தை சட்டவிரோதமாக பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க முடியும்.

இப்படி தடுப்பது மூலம் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் சுமார் 194 மில்லியன் டொலர் முதல் 319 மில்லியன் டொலர் வரை அரசு சேமிக்க முடியும்’ என Ralph Goodale தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது கனடாவும் நாட்டை விட்டு வெளியேறும் நபர்களின் கடவுச்சீட்டு தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

151கனடியர்களின் பெயர்கள் உள்ளடங்கிய ISIS கொலைப்பட்டியல் ?

Next Post

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்BBC

Next Post
துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்BBC

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures