கனடாவில் இருந்து ஈராக்கிற்காக ஆயுத உதிரிப்பாகங்கள் கடத்தல் முறியடிப்பு

கனடாவில் இருந்து ஈராக்கிற்காக ஆயுத உதிரிப்பாகங்கள் கடத்தல் முறியடிப்பு

கனடாவில் இருந்து ஈரக்கிற்கு ஆயுத உதிரிப்பாகங்களை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்றை கனேடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

குறித்த ஆயுத உதிரிப்பாகங்கள் ரொறன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தினூடாக ஈரக்கிற்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. எனினும் இதன்போது, புலனாய்வுப் பிரிவனரின் கண்காணிப்பில் இருந்த ஒருவரிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது இந்த ஆயுத உதிரிப்பாகங்களின் கடத்தல் தொடபான விபரங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன் பின்னர் ரொறன்ரோ விமான நிலைய அதிகாரிகள் அங்கிருந்த சரக்கு ஏற்றும் பகுதியில் உள்ள பொதிகளை சோதனையிட்டனர். இதன்போது, அதற்குள் துப்பாக்கி உதிரிப்பாகங்களும், பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் சாதனங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் முறியடிப்பு முன்னரே மேற்கொள்ளப்பட்ட போதிலும், நேற்று முன்தினமே (செவ்வாய்க்கிழமை) இது தொடர்பிலான விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *