கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்தும் பயத்தினால் இன்று மூடப்பட்டுள்ளன .
ஆயிரக்கணக்கான துருப்புக்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தேடும் வேட்டையில் இணைந்துள்ளன. ஈஸ்டர் தாக்குதலில் கிட்டத்தட்ட 360 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படைகள் ஒரே இரவில் பலரை கைதுசெய்துமுள்ளனர் , ஏனெனில் அரசாங்கமானது குண்டுத் தாக்குதல்களைப் பற்றிய உளவுத்துறை எச்சரிக்கையை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்ததால் பலவகையான அழுத்தத்தை எதிர்கொண்டது.
தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் தினத்தில் வணக்கத்தளங்கள் ஆடம்பர ஹோட்டல்களிலும் தேவாலயங்களிலும் தற்கொலை தாக்குதலை செய்து கொண்டதிலிருந்து, குற்றச்சாட்டுகள் அரசின்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன .
பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் 16 தாக்குதல்தாரிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
பொலிஸார் இதுவரை 75 பேரை கைது செய்துள்ளனர். ஆனால் பல சந்தேகநபர்கள் உலாவுவதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
ஒரு மூத்த கத்தோலிக்க பாதிரியார் AFP செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அனைத்து வணக்க சேவைகளும் இடைநிறுத்தப் பட்டு எல்லா சர்ச்சுகளும் “பாதுகாப்பு படைகளின் ஆலோசனைப்படி” மூடப்பட்டன என்று கூறினார்.
பிரிகேடியர் சுமித் அட்டபட்டு தெரிவிக்கையில் 1,300 முதல் 6,300 இராணுவம் இரண்டு இரவுகள் கடற்படை மற்றும் ஏர்ஃபோர்ஸ்படை 2,000 மூலம் பாதுகாப்பு அதிகரித்துள்ளது என்றார்.
டிரோன் விமானங்கள் மற்றும் தற்காலிகமாக வணிகரீதியான ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

