Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கத்திக்குத்து மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் நியூஸிலாந்து

September 5, 2021
in News, World
0
கத்திக்குத்து மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் நியூஸிலாந்து

வெள்ளிக்கிழமை ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடைக்காரர்களை கத்தியால் குத்திய பயங்கரவாதியை நாடு கடத்த நியூசிலாந்து பல ஆண்டுகளாக முயன்றது என்று நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

அஹமட் ஆதில் மொஹமட் சம்சுதீன் என்ற 32 வயதான இலங்கையர் நியூசிலாந்தில் தனது அகதி அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்த போது, இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதாகவும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.

குற்றவாளியின் பெயர் மற்றும் அவரது குடியேற்ற நிலை வெளியிடுவதைத் தடுத்த நீதிமன்ற உத்தரவுகள் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது.

இந் நிலையிலேயே நியூஸிலாந்து பிரதமர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்ததுடன்,  இலங்கை பிரஜையை 2019 ஆம் ஆண்டு முதல் நியூஸிலாந்திலிருந்து நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சம்சுதீன் 2011 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்து அகதி அந்தஸ்து கோரினார், ஆனால் சந்த சந்தர்ப்பத்தில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

எனினும் அவருக்கு அகதி அந்தஸ்து டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பின்னர் தனிநபரின் அகதி அந்தஸ்து மோசடியாக பெறப்பட்டதாக வெளியான தகவல்களை அடுத்து 2016 ஆம் ஆண்டில் அவர் காவல்துறையினரின் கண்காணிப்புக்குள் வந்தார்.

அவரது அகதி அந்தஸ்து 2019 இல் இரத்து செய்யப்பட்டுடன் நாடு கடத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக  மேல்முறையீடு செய்தார்.

சம்சுதீனின் அகதி அந்தஸ்து வழக்கு தீர்க்கப்படும் வரை அதிகாரிகள் அவரை சிறையில் தடுத்து வைக்க முயன்றனர். ஆனால் அவ்வறு செய்வதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லாத காரணத்தினால் அது பயனிக்கவில்லை.

இந் நிலையிலேயே அவர் வெள்ளிக்கிழமை ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கத்தியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு 30 நாட்களுக்கு முன்னர் சம்சுதீனின் மீது அதிகாரிகள் 24 மணிநேரமும் அவதானம் செலுத்தி வந்ததாகவும் நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.

கத்திக் குத்து தாக்குதலில் மொத்தம் 7 பேர் காயமடைந்தனர், அவர்களில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன், மூன்று பேர் ஆபத்தான நிலையிலும் உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நியூஸிலாந்தில் பதிவான பயங்கரமான தீவிரவாத தாக்குதலாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் நியூஸிலாந்து பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை கடுமையாக்குவதாகவும் உறுதியும் அளித்துள்ளார்.

பாராளுமன்றம் மீண்டும் தொடங்கியவுடன், நாங்கள் அதற்கான பணியினை நிறைவு செய்வோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கையை வீழ்த்தி தொடரில் சமநிலையில் தென்னாபிரிக்கா !

Next Post

தம்பானே பழங்குடித் தலைவரின் மனைவி கொவிட்-19 தொற்றால் காலமானார்

Next Post
தம்பானே பழங்குடித் தலைவரின் மனைவி கொவிட்-19 தொற்றால் காலமானார்

தம்பானே பழங்குடித் தலைவரின் மனைவி கொவிட்-19 தொற்றால் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

September 10, 2026
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

September 10, 2026
ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

September 10, 2026
யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!

September 10, 2026

Recent News

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

September 10, 2026
20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும் இலங்கை விமானப்படை வீரர்கள்!

September 10, 2026
ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

ஆபிரிக்காவுக்கான ஐ.நா. பொருளாதார ஆணைக்குழுவின் இலங்கையின் முதலாவது பெண் நிரந்தரப் பிரதிநிதியாக நிர்மலா பரணவித்தான நியமனம்

September 10, 2026
யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!

September 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures