Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா! சலுகைகளை நிராகரித்த நீதிபதி

February 16, 2017
in News
0
கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா! சலுகைகளை நிராகரித்த நீதிபதி

கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா! சலுகைகளை நிராகரித்த நீதிபதி

பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் முன் தனது கணவர் நடராஜனை கட்டிப் பிடித்து சசிகலா கதறி அழுதார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கு 21 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும் என்பது உறுதியானது.

இதனையடுத்து, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள்.

பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், உறவினர்களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசிக்கும் சசிகலாவிற்கும் நேரம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா.

பின்னர், அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.

சசிகலா கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்களுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்க கோரிய நிலையில் அதில் பலவற்றை நீதிபதி மறுத்துவிட்டார்.

மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரின் அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக, சிறையில் தனக்கு வி.ஐ.பிகளுக்கு ஒதுக்கப்படும் பல சலுகைகளை வழங்குமாறு, நீதிபதியிடம் சசிகலா கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் நீதிபதியிடம் கோரிய சலுகைகள்

தனியாக ஒரு ஏசி அறை, வீட்டு சாப்பாடு, ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகேயுள்ள அறை, வேலை செய்ய உதவியாளர், சிகிச்சைக்கு வெளியேயிருந்து டாக்டர் வர வேண்டும், யோகா செய்ய இடம் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நீதிபதியால் நிராகரிக்கப்பட்டன.

Tags: Featured
Previous Post

சசிகலா வகுத்த அதிரடி திட்டம் அம்பலம்

Next Post

ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை

Next Post
ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை

ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures