யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகு ஒன்று நேற்று முன்தினம் பகல்வேளையில் இனந்தெரியாத விசமிகளால் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி அம்பன் பகுதியில் தொழிலிற்குச் சென்று கரையில் திறுத்மி வைத்திருந்த படகே இவ்வாறு விசமிகளால் மீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. பகல் 3 மணியளவில் தீ வைத்த சமயம் அப் பகுதியில் ஆடு மேய்த்முக்கொண்டிருந்த முதியவர் ஒருவரே அவதானித்து ஓடிச் சென்றுள்ளார். இதன்போது சுரேந்திரராயா என்னும் மீனவரின் படகே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இவ்வாறு படகு எரிந்துகொண்டிருந்த சமயம் படகில் பற்றிய தீயானது அருகில் அடுக்கி வைத்திருந்த வலைகளில் பரவாமல் தடுப்பதற்காக ஆடுமேய்த்த முதியவர் அப் பகுதியில் இருந்து வலைகளை அப்புறப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலகம் , நீரியல்வளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறையிடப்பட்டுள்ளது.

