Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒலிம்பிக் திருவிழா பிரேசிலில் நாளை கோலாகல தொடக்கம்

August 5, 2016
in News, Sports
0
ஒலிம்பிக் திருவிழா பிரேசிலில் நாளை கோலாகல தொடக்கம்

ஒலிம்பிக் திருவிழா பிரேசிலில் நாளை கோலாகல தொடக்கம்

o oo oooooஉலகம் முழுவதும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது.

நாளை தொடங்கும் இந்தப் போட்டிகள் 21ம் திகதி வரை திருவிழாவாக நடக்கவுள்ளது

இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 11,178 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ரியோ டீ ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் தான் தொடக்க விழா நடைபெறுகிறது. அங்கு 78,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து விழாவை பார்க்க முடியும்.

தொடக்க விழாவில் பல்வேறு நாட்டின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவினை உலகம் முழுவதும் இருந்து 90 கோடி மக்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அந்த மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் அணிவகுப்பில் கிரீஸ் நாடு முதலாவதாக அணிவகுக்கிறது. அதே சமயம் ஒலிம்பிக்கை நடத்தும் பிரேசில் கடைசி நாடாக அணிவகுப்பில் பங்கேற்கிறது.

200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக்கில் மிக நீண்ட நேரம் அணி வகுப்பு நடைபெறவுள்ளது. குறிப்பிடும்படியாக, இந்த ஒலிம்பிக்கில் அகதிகள் அணியும் பங்கேற்கிறது.

நாடுகளின் அணிவகுப்பு, அனைத்து நாடுகளின் கொடிகளை ஏற்றுதல், ஒலிம்பிக் தீப ஜோதியை ஏற்றுதல் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன.

பிரேசில் மொடல் அழகியும், முன்னாள் விக்டோரியா சீக்ரட் மொடலுமான கிஸெலெ புஞ்செனின்(Gisele Bundche) நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.

மேலும், திருநங்கை மொடல் அழகியான லியா டீ (Lea T) நடத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தவிர, ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகியான அனிட்டாவின் ( Anitta) நிகழ்ச்சியும் உள்ளது.

ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து ஜாம்பவான் பீலே ஏற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 வயதான கால்பந்து ஜாம்பவான் பீலே, மூன்று உலகக்கிண்ணங்களை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

ரியோ ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்த கனடாவின் பெக்கி!

Next Post

அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

Next Post
அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

அப்பிள் iPhone 7 இரகசியம்: கசிந்த புது தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures