Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

September 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

ஒரே நாட்டுக்குள் அதிகார பகிர்வை மேற்கொண்டு, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக்கொள்கின்ற செயற்பாட்டுக்கு இடமளிக்காது, குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் இடையே திங்கட்கிழமை (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

வடக்கு பிரதேசத்துக்காக தனியான ஜனாதிபதி செயலணி ஒன்றும் நிறுவப்படும். ஏனைய பிரதேசங்களுக்கும் மாகாண அடிப்படையில் செயலணிகள் அமைக்கப்படும். 

இந்த செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களுக்கு இரண்டு உப செயலணிகளும் அமைக்கப்பட்டு, மாதாந்த வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

பெண்களை தலைமையாகக் கொண்ட அதிக குடும்பங்கள் காணப்படுவதோடு, அவர்கள் நுண் நிதி கடன் பொறிக்குள் சிக்கியிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தீர்வும் இல்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகமான குடும்பங்கள் காணப்படுகின்றன. தானும் இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில், யுத்தத்துக்கு பின்னரான இந்தப் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவேன். இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் உட்பட தொழில் இல்லா பிரச்சினைக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

வடகிழக்கு மக்களை பாதுகாக்கும் வகையிலான முற்போக்கான பல செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். ஒரே நாட்டுக்குள் அதிகார பகிர்வை மேற்கொண்டு, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக் கொள்கின்ற செயற்பாட்டுக்கு இடமளிக்காது, குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவோம்.

மேலும் நன்னீர் மீன் பிடி, கரைவலை மீன்பிடி உட்பட பல கைத்தொழில் வாய்ப்புக்களின் ஊடாக அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும். இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதோடு, இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Previous Post

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 

Next Post

நந்திக்கடலே உன்னை மறப்பேனா நான் – நதுநசி

Next Post
வடக்கு கிழக்கு ஆயர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? | நிலாந்தன்

நந்திக்கடலே உன்னை மறப்பேனா நான் - நதுநசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures