ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பொலிஸார் சுட்டுக் கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பொலிஸார் சுட்டுக் கொலை

தீவிரவாத செயற்பாடுகளிலிருந்து விடுதலை பெற்று, அரச பாதுகாப்பு படையில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

வடமேற்கு ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தின் அல்மார் மாவட்டத்திலுள்ள, சோதனை சாவடிக்கருகில் வைத்தே குறித்த 8 பொலிஸாரும், உடன் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த கொலைகள், அப்பகுதியிலுள்ள தலிபான் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலிபான் அமைப்பிலிருந்து விலகிவந்த குறித்த 8 பேரும், அந்நாட்டு பாதுகாப்பு படையில் இணைந்து சில நாட்களிலேயே கொல்லப்பட்டுள்ளமையானது அல்மார் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த கொலையுடன் தொடர்புடையதாக, தலிபான் அமைப்பை சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டும் சரணடைந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *