Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின்

May 2, 2017
in News
0
ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின்

ஜெனீவாவில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின்படி, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த ‘டெசோ’ மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் 2017-2018-ம் ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.க. மற்றும் ‘டெசோ’ அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு இருப்பதன் மூலம், ஈழ மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலைப்பாடு உலக அரங்கில் ஆணித்தரமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு 17-4-2017 அன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் 2-வது அரசவையின் 7-வது நேரடி அமர்வில், மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 35-வது மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்சினைகள், விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளாவிய தமிழர்களிடம் எழுந்துள்ளது.

தி.மு.க. செய்தி தொடர்பு செயலாளர் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலினின் பங்கேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Tags: Featured
Previous Post

தமிழகத்தில் பாஜகவின் பலே திட்டம்: முதலமைச்சர் வேட்பாளர் யார் தெரியுமா?

Next Post

எடப்பாடி ஆட்சிக்கு யூலை மாதம் வேட்டு: டெல்லியில் கசிந்த தகவலால் அதிர்ச்சி

Next Post
எடப்பாடி ஆட்சிக்கு யூலை மாதம் வேட்டு: டெல்லியில் கசிந்த தகவலால் அதிர்ச்சி

எடப்பாடி ஆட்சிக்கு யூலை மாதம் வேட்டு: டெல்லியில் கசிந்த தகவலால் அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures