Tuesday, May 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள்

August 29, 2016
in News
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்து இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலம் ஆகியவற்றுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், 03 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தங்கியிருக்கும் 03 நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளதுடன், காலி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

கடந்த யுத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவையாகும். இறுதி யுத்தம் வடமாகாணத்தில் இடம்பெற்றிருந்தாலும், 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலும் பாரிய யுத்தம் இடம்பெற்றது.

இம்மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதுடன், அவர்களை இன்னும் அவர்களின் குடும்ப உறவினர்கள் தேடி வருகின்றனர்.

இங்கு பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கென்று ஒரு வீடு கூட இல்லாத நிலையில் உறவினர்கள் வீடுகளிலும் அகதி முகாம்களிலும் வாழ்கின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது வடமாகாணத்தை விட கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம்கள் வாழ்வதுடன், இவர்கள் கடந்த யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் குறைநிறைகளை கேட்டறிவது தொடர்பில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதென்ற உண்மை மறைக்க முடியாதாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டு, இங்குள்ள மக்களின் அவலக்குரல்கள் உரிய இடங்களுக்கு போய்ச்சேராமல், அவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் இருப்பதென்ற விடயம் மறைக்க முடியாதாகும்.

அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இன்றுவரை ஆதாரங்கள் இருக்கின்றன.

மிக அதிகமான இழப்புகளை முஸ்லிம்கள் சந்தித்திருந்ததுடன், இவ்வாறான விடயங்களை சர்வதேச முகவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இலங்கைக்கு வரும்போது, இம்மக்களின் துன்பங்களை கேட்காமலும் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புகளின் குரல்களை கேட்காமலும் இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

ஆகவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாம் கேட்கும் விடயம் என்னவென்றால், இம்முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமான மட்டக்களப்புக்கு அவர் விஜயம் மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களின் துன்பங்களை கேட்டறிவதற்காக ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னர் முப்படையினருக்கும் என்ன வேலை? விக்கினேஸ்வரன் ஆவேசம்!

Next Post

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Next Post
Easy24News

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025

Recent News

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

குழந்தையை காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தாய் !

May 12, 2025
பாலஸ்தீன -ஈழத்தமிழர்களின் போராட்டங்கள் தொடர்புபட்டவை | தமிழ் ஏதிலிகள் பேரவை

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபியை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் 

May 12, 2025
ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஹெலிகொப்டர் விபத்து | நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

May 12, 2025
ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

ஒரு ஊடகவியலாளருக்கு வார்த்தை நாகரிகம் வேண்டும் – கிருபா பிள்ளை

May 11, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures