ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடருக்கு தனது 3 பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் பாராட்டுக்குரியது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.
இவர்கள் அம்மாநாட்டில் கருத்துத் தெரிவிப்பதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தில் இரு கருத்துக்கள் கொண்ட குழுக்கள் இருப்பது உலகத்துக்கு தெரியவரும். ஜனாதிபதியின் தூர நோக்கின் ஒரு நடவடிக்கையே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிவிதுரு ஹெல உறுமய நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.